Sunday, August 12, 2018

நீண்டதோர் வாழ்விற்கு அஞ்சலி

ஒரு சகாப்தம் நிறைவுற்றது!

வாழ்வில் ஏற்ற இறக்கங்கள்
என்றும் நிலையற்றது
என்று வாழ்ந்து காட்டி
வேந்தனாகவே வாழ்ந்து மறைந்தார்!

கொள்கையும் கோட்பாடும்
வாழ்வின் உச்சத்திற்கு ஏறும்
படிகளாக்கி கொள்ள உணர்த்தியவர்!

பகுத்தறிவும் நாளை கடவுளாகலாம்
சமாதியும் கோபுரமாகலாம்
சிலைகளும் வழிபாடு ஸ்தலமாகலாம்!

தமிழகத்தின் 60 ஆண்டு கால
திராவிட ஆளுமைகள் விடைபெறுகின்றன
கொற்றவன் ஏற்றிய கொள்கைகளை
கொடி பிடித்து ஏற்பவர் எவரோ!

மனித வாழ்வில் சகாப்தங்கள்
தோன்றி மறைகின்றன
நிலைத்து நிற்பவை
கொள்கையும் கோட்பாடும் மட்டுமே!

ஏற்பவர்கள் எவரோ வீழ்த்துபவர்கள் எவரோ!


அஞ்சலிகள்!

No comments: