Wednesday, May 30, 2018

வைகாசி விசாகம்

வைகாசி விசாகத்தில் பிறந்தோம்
விசால மனதோடு உறவுகளைப் பெற்றோம்!

பழனி முருகனுக்கோர் உற்சவ தினம்
சுப்ரமணிக்கோர் அர்ச்சனை தினம்!

வைகையும் காவிரியும் சிலிர்க்கும் வைகாசி
விசையும் சாகசமும் திறமை கொண்ட விசாகம்!

கோவத்தில் குன்றின் மீது நிற்கும் குமரனாவோம்
குரல் கொடுப்போர்க்கு மயிலிறங்கி தோள் நிற்போம்
அஞ்சாநெஞ்சுடன் எதையும் எதிர்கொள்வோம்!

துன்பங்களை தினமும் தோளில் சுமந்தாலும்
துவளுகின்ற மனதில்லை பிறப்பிலிருந்தே
அஞ்சி நடுங்கி ஒதுங்கும் மனதில்லை என்றும்
உயிர் கொண்டெழுந்து எதிர்பபோம் எதையும்!

தோழமையாய்ப் பிறந்த சக வைகாசி விசாகங்களே!
போற்றிப் பாடிடுவீர் உங்கள் பிறந்த தினத்தை
உற்றார் உறவினர் உள்ளத்தாரோடு
ஒன்றாய் குழுமி கொண்டாடிடுவீரே!

இனிய பிறந்த தின வாழ்த்துகள்!

No comments: