Saturday, March 3, 2018

கேப்போமா இனி

கேட்கக் கேட்க ஞானம் வரும்பாங்க
எனக்கு தூக்கம் வரும்ன்னா
கேப்போமா இனி!

கேட்டு கேட்டு எவனும் வந்துராதீக
கூண்டோட தூக்கிடுவோம்ன்னா
கேப்போமா இனி!

கேள்விகளே பறிக்கப்படும் இலையெனில்
இனி துளிர் விடும் இலைகளைக் களைவேனென்றால்
கேப்போமா இனி!

கேள்விகளே உலர்ந்த சருகானால்
மட்கிப் போன சருகுகள் உரமாகாதோ
கேப்போமா இனி!

கேள்வியில் வளரும் குட்டிப் பிஞ்சுகளை
வளர விடாத கேள்விகளாக்குமெனில்
கேப்போமா இனி!

மரத்திலுள்ள கேள்விகளாய் இலைகள்
அதில் மலர்ந்த பூக்கள் காய்களாகினவா என
கேப்போமா இனி!

2 comments: