Thursday, November 23, 2017

தூரிகை அன்னம்

வரைபடங்களை வரவேற்பதில் வல்லவன்
  வரைபவளை கையேந்தியவன்!

கை பிடித்தவளின் தூரிகையை
 உயர்த்தி நிற்கிறான் இங்கு!
வண்ணப்படங்கள் தூரிகைக்கு தேனூட்டுகிறது!

தூரிகை வரையும் படங்கள்
  விண்ணில் பறந்து நிற்கிறது!
மணாளனோ வண்ணத்திரை படங்கள் தேடி
 மாநகரவீதியில் பறக்கிறான்!

அழகிய ஓவியங்கள் அங்கும் இங்கும்
  ஆனால் இது அன்பு பெருங்கடலில்
தூரிகை ஏற்றிய தீபம்!

இது தூரிகை அன்னம்!

No comments: