Saturday, November 4, 2017

மண்ணின் மனதிலொரு சுரபி

வைசாகத்தில் பிறந்தோம்
    விசாகன் என்று நாமம் பெறாமல்
விசாலமாய்ப் பிறந்தோம்
   முன்கோபம் முன்னின்று குறுக்கி விடும்!

குன்றிருக்கும் இடத்தில் குமரனிருப்பான்
     என குன்றேறி விடுவோம்
குமரனின் விசாரத்தில் ஆண்டியாய்
     மனதளவில் இருந்திடுவோம்!

வைகாசியின் விசாகத்தில்
    மணிமேகலைக்கு அமுதசுரபி
   புத்தனுக்கு ஞானம்
வைசாகனுக்கோ தொலைதூரத்தில்
   மானைத் தேடும் மயக்கம்!

மண்ணின் மனதிலொரு சுரபி.

No comments: