Saturday, November 4, 2017

கொடுத்தவர்களே பறிக்கும் உறவு

வானுயர எழுந்து நிற்க முயன்றேன்
ஏறிய ஏணிப்படிகள் வலுவற்று நிற்கின்றன!

வலுப்பெற பாதைகளை சரிசெய்ய முயன்றேன்
நுணலின் வாய் இழுக்கின்றது!
பாதை வலுப்பெற படி அமைத்தேன்
வெண்ணையாய் நிற்கிறது!

காலில்லாதவன் ஏறிவிடுவான் மலை மீது
காலிருந்தும் கிணற்றில் தவிப்பேன் துணையின்று!

கொடுத்தவர்களே பறிக்கும் உறவு!

No comments: