Sunday, December 11, 2016

வெற்றிலைப் புகை வண்டி

புகை வண்டிக்கு கொடி அசைக்கும் போதும்
தன் புகையிலையை மறந்ததில்லை!

புகைவண்டி நிற்க சிவப்புக்
கொடியைக் காட்டும் முன்
வாய் வெற்றிலையில் சிவந்திருக்கும்!

வண்டி நின்றது இவரது
கொடியிலா வாய் சிவப்பிலா!

கணீரென வெண்கலக் குரலில்
ஒலிக்கும் ஊதலில்வெளிவரும்
தானறிந்த ராகங்களின் பெயர்கள்!

கையிடுக்கில் ஹிந்துவுடன்
வெளிர்ந்த உடையில் கொடி பிடித்து
அந்த கூட்ஸ் வண்டியில் ஏறும் பாங்கு
இன்றும் மலர்ந்ததொரு நினைவு!

தஞ்சை ரயிலடியில் உங்கள் வண்டி
கண் மறையும் வரை காந்திருந்து
திரும்பிய நாட்கள் இன்று
உங்கள் மறைவில் மலர்கின்றன!

கண்ணை விட்டு மறைந்ததொரு
இன்னொரு வெற்றிலைப் புகை வண்டி!

No comments: