Saturday, June 13, 2015

இசையை பொருளாக்கியதில்

இசை பொருளாக்கப்பட்டு விட்டது. இசை சத்தமாக மாறி விட்டது.  NRIகள் சென்னை டிசம்பர் சீசனில் இப்ப அதிகம் பங்கேற்பதால் ம்யூசிக் தரம் குறைஞ்சு போச்சு அதனால் TM Krishna இந்த சீசன் பாடப் போவதில்லைன்னு படிச்சேன். அது அவர் விருப்பம். சிலவற்றில் உண்மை இருக்கலாம்.

இங்கு  தியாகராஜ ஆராதனையில் கூட கலந்து கொண்ட சிலர் அங்கு நடக்கும் போட்டிகளில் பரிசு வழங்குவதில் பாரபட்சம் நடப்பதாக சொல்வதை கேள்விப்பட்டேன்.

ஆனால் இது எல்லாவற்றிலும் ஒன்றைப் பார்த்தால் எல்லாம் கமர்ஷியலாகி விட்டது. வித்வான்கள் nri குழந்தைகளுக்கு சொல்லிக் கொடுக்கும் கட்டணம் கூட. அரை மணி நேரத்துக்கு 25$. ஒரு மணிநேர கிளாஸ்க்கு 50$. வித்வான்கள் இங்கு வரும் போது ஒரு வார கேம்ப் நடத்துகிறார்கள். கட்டணம் 300$. எவ்வளவு கட்டணம் வைத்தாலும் குழந்தைகள் போக வேண்டியுள்ளது.

ஒரே காரணம் பெரிய வித்வானிடம் கற்றுக் கொள்கிறோம் என்று NRI பெற்றோர்களின் நப்பாசை. கற்றுக்கொள்ளும் குழந்தைக்கு பெற்றோர் செலவு செய்யும் பணத்தின் அளவும் தெரியாது கற்றுக் கொடுக்கும் வித்வான்களின் அருமையும் தெரியாது. ஆனால் பெற்றோர்களின் விருப்பம் மட்டுமே வித்வான்களின் பசிக்கு இரையாகுது.

இதையே இந்தியாவில் இருக்கும் குழந்தைகளுக்கு ஒரு மாத கட்டணம்  2000 மட்டுமே என்று கேள்விப் பட்டேன்.

இதே வித்வான்கள் அமெரிக்கா வரும் போது இவர்கள் தங்க, பயணிக்க, entertain பண்ண இவர்கள் வாங்கும் கட்டணத்திற்கும் மேலாக பல மடங்கு NRI கள் செலவு செய்கிறார்கள்.  எல்லாம் இசையின் மீதுள்ள அலாதி பிரியம், வித்வான்களுக்கு செலவாகும் பணம், மணித்துளிகள் துச்சமாக கருதி, அது இசைக்கு செய்யும் மரியாதையாக பார்க்கப் படுகிறது.

இவ்வளவும் செய்யும் nri பெற்றோர்கள் எந்த வித்வான்களை உருவாக்கிய அதே சென்னை மார்கழி சீசனில் பாட ஆசைப்படுவதில் அதற்கான செலவுகள் செய்வதில் வித்யாசம் பார்க்க மாட்டார்கள் தானே.

எனக்கு தெரிந்து சில பெற்றோர்கள் டிசம்பர் சீசன் முடியும் வரை இங்கு சம்பளம் போனாலும் லீவை போட்டு, அங்கு ஒட்டல் அறையில் அதிக கட்டணம் செலுத்தி பெரிய வித்வான்கள் பாடும் அதே மேடையில் தன் பிள்ளைகளும் பாட பாடுபடுகிறார்கள்.

இசையின் தரம் குறைந்தால் வித்வான்களும் பொறுப்பு தானே! நீங்கள் சொல்லிக் கொடுத்தவை தானே! 

நீங்கள் இங்கு வந்து போக உங்களுக்கு மட்டும் தான் nri செலவு செய்ய வேண்டுமா. அவர்கள் பிள்ளைகளுக்கும் ஒரு காலத்தில் இதுவெல்லாம் உதவக்கூடும் என்று தானே எல்லாம் செய்தார்கள்.

கமெர்ஷியல் ஆக்கியதில் உங்கள் பங்கும் உண்டல்லவா?

இசையை பொருளுக்காக உடைமையாக்கியத்தில் நம் எல்லோருடைய பங்கும் இருக்கு.  மீள முடியுமான்னு பார்ப்போம். கிருஷ்ணாவின் பகிஷ்கரிப்பை விட வேறு விதமாய் நல்லபடியாக மாற்ற ஒரு வேண்டுகோள்.

# சும்மா ஒரு NRI புலம்பல்