Sunday, March 1, 2015

அன்பென்ற வாழ்வில்

இறக்கம் தளர்ந்து செல்லும் உறவில்
இறுக்கிப் பிடிக்க நினைப்பது
கர்வமா இழப்பா கன்றா!

இழப்பென்றால் கர்வம் தளர்ந்து செல்
கர்வமென்றால் புது சுகந்தம் தேடு
கன்றென்றால் ஆறப்போடு 
கர்வத்தையும் இழப்பையும்!

வாழ்வே போராட்டம்!
இதில் போராட அகந்தையின்றி வேறெதுவே!
வீதியில் வாளெடுத்துப் போராட சமுதாயப் பிரச்சனையல்ல!
சமுதாயம் பரிகசிக்கும் குடும்பப் பிரச்சனை!

வெற்றியும் தோல்வியும் உன்னிடமே!
வெல்லப் போவது அகந்தையா வாழ்வா!
கன்றை நீர் சுரக்க வைக்க கள்மனது தேவையன்று!

அன்பென்ற வாழ்வில் இருவர் பங்கே செல்வமண்டோ!
அன்பாய் செல்வீர் கன்று துள்ளி ஆட!

அகந்தையை வென்றிடுவீர் அன்பின் வலிமையால்!

1 comment:

திண்டுக்கல் தனபாலன் said...

அதானே...? வேண்டவே வேண்டாம் அகந்தை...