Saturday, February 21, 2015

நினைவலைகள் மறையும் முன்

ஆறுதல் அடைய முடிவதில்லை எளிதில் !
இழக்கக் கூடாதவர்கள் தொலைதூரம்
மறைந்து விடுகிறார்கள் நிழல் போல்
நினைவுகளை நிறுத்தி விட்டு!

தோளில் சுமந்த கைகளைப் பற்றிக்  கொண்டு
செல்லும் நினைவலைகள் மறையும் முன்னே
நம்மை விட்டு தொலைதூரம் கடந்து விடுகிறது
விட்டுச் செல்கின்ற வண்ண நினைவுகள்!

விடைபெறும் நேரத்தில் அருகில் இல்லை
எதை விடைகூறி சென்றாரென்று தெரியவில்லை
மார்ச்சுவரியிலிருந்து மயானம் வரை சென்று
கேட்டுப் பார்த்தும் தெரியவில்லை!

இன்றோர் தந்தை மறையும் முன் தனையனிடம்
விட்டுச் சென்ற வார்த்தைகளை உடனிருந்து
கைப்பற்றி அறிய முடியா தூரத்திலிருந்து கொண்டு
வழிதடம் அனுப்பி வைக்கும் சோகம் மறைவதில்லை!

ஆறுதல்கள் தேவையில்லை ! ஆதரவு உண்டு!
விட்டுச் சென்றவர்கள் கொடுத்த வழித்தடம்
திறம்பட அறியும் மனத்திடம் உண்டு!
கரைந்தாலும் நன்கு கரையேறுவோம்!

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

நம்பிக்கை... தன்னம்பிக்கை...

R. Ramesh said...

Ok