Friday, November 28, 2014

கரிய இரவில்

கரிய இரவில் தனியாய்
கசிந்துருகி நோக்கில்
கரை தொடும் கால்களில்
கசிந்துருகும் கண்ணீர்த்துளிகள்!

கரிய நிழல்களில் படரும் கனவில்
உறவுகளின் மறைந்திருக்கும் பகைமை !
ஒருவரின் கூற்றில் மற்றவரின் திரித்தல்
இருவரின் மீது நட்பாடும் நெஞ்சில் ஓர் களக்கம் !

கரியவிடாமல் களமிறங்கி
கனிவாய் நகர்திடும் காய்கள்
கண்டோர் காணிடும் களப்பரப்பில்
களமிடும் விதைக்குவியல்!

கரிய இரவில்
கரியும் தகனமேடை
கரையும் மனதுடன்
கரையில் ஒருவன்!

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சோகமான தருணம்...

Seeni said...

நல்ல வரிகள் ..

ஓலை said...

நன்றிங்க தனபாலன், சீனி.