Tuesday, October 21, 2014

கூடு

கூடு 

கூட்டைக் கட்டினேன்.
குஞ்சுகளை வளர்த்தேன்.
குஞ்சுகள் வளர்ந்தன.

படிப்பறிவின்றியும் பொருளாதாரம்
அறிந்து வளர்த்தேன்.
குஞ்சுகள் படிப்பு, வாழ்வினை கற்றன.
பலமாய் பறந்தன.

மிக பொறுப்புடன் உழன்று
திரிந்த ஆண்மகன்
கூட்டின் கவலையற்று திரிந்தாலும்
உற்றாரை மிகவும் ஒட்டி வந்து
உறவுகளை புதுப்பித்து கொடுத்து வந்தான்.

முதுமையும் வந்தது.
முதுமையில் ஆண்மகன் வலுவிழந்தான்.
கூடும் கலைந்தது.
உறவுகளின் கூட்டில்
ஆண்மகனை கரையேற்றினேன்.

இன்று.
ஆண்மகனும் நீண்டு உறங்கிவிட்டான்.
குஞ்சுகளும் தூரத்தே உறங்கி விட்டன.
உடலும் வலுவிழக்கிறது.
நோய்களின் தாக்கம் உடலை குலைக்கிறது.

எஞ்சியுள்ள தனிக்கூட்டில்
உறக்கம் தேடுகிறேன்.

கூடு கட்டி வளர்த்த போது
இருந்த மனஉறுதி தேடி வருகிறேன்.
தனியாய் விழ மாட்டேன்.

நான் கட்டிய கூடு.
அவிழ்ந்து போகாது.
சகலருக்கும் எனது கூடு
ஒரு வாழ்க்கைப் பாடம்.