Wednesday, September 24, 2014

உன் சுமைக்கு என் இரங்கல்கள்

இறந்தவன் சமாதியில்
இறக்கும் சுமைகள்
இடம் பெயர்ந்து செல்லும் தூரம்
தன் சுமையை சமாதியில்
அடக்க முடியா தூரம் அது.

இறந்தவன் தன் சுமையை
இன்னொருவர் தோளில்
இறக்கிச் செல்லவில்லை,

ஆனால் தன் சுமையைத் தூக்கி
இறந்தவன் சமாதி வரை
கொண்டு செல்லும் மானுடம்.

அறிஞன் இறந்தாலும்
அறிவிலி இறந்தாலும்
தோள் கொடுத்து சமாதி வரை
கொண்டு சென்றவரையும்
சென்றடையும் உன் சுமை.

அழுத்தும் சுமையை
சுமைதாங்கியாய் 
பிடிப்பதும் மானுடம்
மண்ணுள் சேர்த்து 
தைப்பதும் மானுடம்.

உன் சுமையை அறிய 
நான் இல்லை இப்புவியில்.
என் சமாதியில் நீ இறக்கிய 
உன் சுமைக்கு என் இரங்கல்கள்.



No comments: