Monday, December 30, 2013

புத்தாண்டு நல்வாழ்த்துகள்

2013

பல தோல்விகளை அவமானங்களை சந்தித்த வருடம். தோற்கும் திட்டங்களை செயல் படுத்தி வெற்றி காண்பித்தும் தோற்கடிக்கப் பட்ட வருடம்.

தோல்வி கண்டு என்றுமே துவண்டதில்லை, ஏன் எனில் தோல்வியையே அதிகம் பார்த்திருப்பதால்.

எதிர்பாராத அவமானங்கள் கண் முன்னே வந்து நிற்கும். எதிர்பாராத இடத்தில் ஏற்பட்ட நிகழ்வுகள் மனதில் வலியை ஏற்படுத்திய காலம். கையறு நிலையை உணர்ந்த காலம்.

அருகில் செல்லாத இடத்தில் கூட அவமான ஏச்சுகளை கேட்ட வருடம். எதிர்த்துப் பேசி பழக்கமில்லாததால் கேட்பவற்றை துடைத்துக் கொண்டு, ஒரு மாற்று வழி அமைத்துக் கொள்வதையே செயல் படுத்தி வருவதால் இதிலும் துவண்டு போகவில்லை.

சிறு கை வலி, பெருத்த செலவுகளை உருவாக்கினாலும், முன்னேற்படுத்திக் கொண்ட இருப்புகள், வாய்ப்புகள், வாழ்க்கைத் துணை உதவியுடன் சுலபமாக கடந்து செல்ல முடிகிறது.

எனது வாழ்க்கைக்கும் சிறு எறும்புகளின் வாழ்க்கைக்கும் பெரும் வித்தியாசம் கிடையாது. திட்டமிட்ட இலக்கை நோக்கை நோக்கி ஊர்வது. தடைகள் மற்றும் அவமானங்கள் நேரும் நேரத்தில் திட்டமிடாத வேறு இலக்கை நோக்கி நகர்ந்து தேவையைப் பூர்த்தி செய்து கொள்வதே சமீப கால வாழ்வாகி விட்டது.

இவ்வுலகில் சகல பிராணிகளுக்கும் வாழ்விருக்கிறது. ஆதலால் மாற்றம் ஏற்படுத்திக் கொண்டு நகர்வதே வாழ்க்கை. பெரும் இடி விழும் நேரத்தில் பக்கத்தில் ஒரு அருமையான சாலை செல்வதைப் பார்க்கும் வாய்ப்பு உடன் அமைவது தோல்வி கண்டு துவளாதே மைந்தனே என்று சொல்வது தெரிகிறது.

வருடம் சீக்கிரமே கழிந்து விட்டது.

2014

பெரும் மாற்றம் எதுவும் இல்லாவிட்டாலும், அடுத்த கட்டத்திற்கான அடித்தளம் இட்டாகி விட்டது. நல்ல படி நகர வேண்டியது நகரும். வயதிலும் ஒரு புது இலக்கைத் தொடும் வருடம்.

சிறு சிறு படிகளில் ஏறி மலை உச்சியை அடைந்தாலும் உடன் சுமந்த வலிகளால் வாழ்க்கையை நிரப்பாமல் ஒரு இனிதான சுகமான காற்றை சுவாசிக்கும், சுவாசிக்கப் போகும் நினைவில் படிகளை சிறுக சிறுக ஏறுவோம்.

அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

7 comments:

பழமைபேசி said...

வாழ்த்துகள்

இராஜராஜேஸ்வரி said...

மனம் கனிந்த இனிய புத்தாண்டு வாழ்த்துகள்!

ஓலை said...

பழமை, இராஜராஜேஸ்வரி !

நன்றி. உங்களுக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள்.

திண்டுக்கல் தனபாலன் said...

வணக்கம்...

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… Followers ஆகி விட்டேன்… தொடர்கிறேன்... இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2014/01/blog-post_18.html) சென்று பார்க்கவும்... நன்றி...

ஓலை said...

வாங்க. வாங்க திண்டுக்கல் தனபாலன். நன்றிங்க. :-)

திண்டுக்கல் தனபாலன் said...

Once Again...

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது... வாழ்த்துக்கள்...

மேலும் விவரங்களுக்கு கீழுள்ள இணைப்பை சொடுக்கவும்... நன்றி...

அறிமுகப்படுத்தியவர் : ராஜி அவர்கள்

அறிமுகப்படுத்தியவரின் தள இணைப்பு : காணாமல் போன கனவுகள்

வலைச்சர தள இணைப்பு : அன்பாலே அழகாகும் வீடு!!

ஓலை said...

Nanringa dindigu dhanabalan.