Saturday, April 6, 2013

ரூள்ஸ் இராமசாமி


ரூள்ஸ் இராமசாமி 

இது யாருன்னு கேட்கரீங்களா, தெரியாது. ஆனால் பத்து நிமிஷம் உங்க காரை ஒரு ஹான்டிக்கப் பார்க்கிங் பக்கம் நிறுத்திட்டு பார்த்திங்கன்னா நீங்களும் ரூல்ஸ் இராமசாமி ஆகி விடலாம். உடல் ஊனமுற்றவர்கள் வசதிக்காக வைத்துள்ள பார்க்கிங் space ய் தவறுதலாக உபயோகப் படுத்துவது இந்தியாவிலிருந்து இங்கு வந்துள்ள மக்கள் மட்டுமே.

 உள்ளூர் மக்கள் மட்டும் ஒருவர் கூட இதை செய்யவே மாட்டங்க. இடமில்லை என்றால் கூட கொஞ்சம் தள்ளி ஒதுக்குப் புறமாக மற்ற கார்களுக்கு வழி விட்டு செய்கிறார்கள். அங்கு தற்காலிகமாக கூட செய்ய மாட்டார்கள்.

நம்மக்கள், அவ்விடத்தில் தம் காரை நிறுத்தி இறக்கி விடுவதும் ஏற்றிக்கொள்வதும் சில சமயம் காத்திருப்பதும் தவறாமல் செய்பவர்கள். ஓரிருவர் என்றால் பேசாமல் இருந்து விடலாம். ஆனால் பத்தில் 8 கார் இதை செய்யும் மக்கள் இந்திய வம்சாவளியினர் என்று பார்க்கும் போது மனதுக்குள் உறங்கிக் கொண்டிருக்கும் ரூல்ஸ் இராமசாமி முழித்துக் கொண்டு விடுவார்.

மீதி இரண்டு கார் யாரென்று தவறாமல் கேப்பீர்கள். தெரியும். அதுவும் நீங்கள் ரூல்ஸ் ராமசாமியாவதற்க்கு தகுதியான கேள்வியே. அந்த இரண்டு கார்கள் கூட நம் இநதிய மக்களை இறக்கி விட வந்த கார். அவர்களை  அவ்வாறு விட்டுச் செல்லுமாறு சொல்வதும் நம் மக்களே!.

ரூல்ஸ் இராசாமியான நீ பார்த்து கிட்டு என்ன செய்தன்னு கேட்கலாம். உங்களுக்கு முழு தகுதியும் வந்து கொண்டிருக்கிறது. முன்பேற்பட்ட அனுபவத்தின் காரணமாக நான் ஹான்டிகாப்  போர்டை பார்ப்பதும் இவர்களையும் மாறி மாறி பார்த்தே ஒரு வழி பண்ணிவிட்டேன். ரூல்ஸ் ரூல்ஸ்சாதானிருக்கனும். மாறக்கூடாது இல்லையா?

இவர்கள் வண்டியிலிருந்து இறங்கும் நாளைய சமுதாயம் இது தவறு என்று உணராமலே வளர்கிறது. நாளை இவர்கள் தவறாமல் கடை பிடிப்பார்கள். இல்லையா?

பார்த்து விட்டு சும்மா வந்து இங்க வந்து பொங்கல் வைக்கிற நீயெல்லாம் ன்னு நீங்கள் கேட்கலாம். உங்களுக்கும் முழு தகுதி வந்து கொண்டேயிருக்கிறது.

ரூல்ஸ் இராமசாமியாகிய நான் லெப்ட்ல ஓடிச்சு ரைட்டுல போயிக்கிட்டே ரூல்ஸ் கடை பிடிப்பேன். ரூல்ஸ் ருல்சாத் தானிருக்கணும்.

ஓகே. ஓகே, இது ரொம்ப ஓவர்ன்னு நீங்க சொல்றது புரியுது. யு ஆர் புல்லி QUALIFIED நொவ்.

4 comments:

பழமைபேசி said...

:)

திவாண்ணா said...

:-))

ஈரோடு கதிர் said...

மிஸ்டர் ரூள்ஸ் ராமசாமி

நீங்க நல்லவரா? கெட்டவரா? :)

ஓலை said...

:-)
தெரியலை மேயரே.