Thursday, January 3, 2013

இடமறியா மணப்பெண்


இடமறியா மணப்பெண்!

தேவையற்ற இடத்தில் காலை வைத்து 
பொருந்தாத விடயத்தில் மாலை போட்டு 
விருப்பமில்லா மணப்பெண் ஆனேன்!

மண்ணில் வேரூன்றியவை 
விஷமாய்ப் போனதால்
வைக்கும் இடமெல்லாம் 
முள்செடி ஆனதடா !

முள்ளின் மீது நடக்கும் போது  
காலில் குத்தும் முட்கள் 
அகட்டி விடும் காலம் வரும் வரை 
விளையாத மண்ணில் விதைக்கும் 
பருத்தியானேன் !

முள் அகற்றத் தெரியாத 
சமூகத்தின் வேர்களைத் 
தவறித் தூக்கிப் பிடிக்கும்
கருவேல மரமானேன்!

பருத்தி முள்செடி கருவேலத்தை 
ஒன்றாய் நோக்கியதில் 
பஞ்சும் தெரியவில்லை 
எரிக்க விறகும் கிடைக்க வில்லை!  

1 comment:

பழமைபேசி said...

இதுவும் கடந்து போகும்!