Saturday, December 15, 2012

Paper Weight

எனது வீட்டிற்கு உறவினர்கள் நண்பர்கள் வரும் போது விருந்தோம்பல் கொஞ்சம் அதிகமாவே இருக்கும். மனைவி நிறைய பதார்த்தங்கள் செய்து அசத்தி விடுவார். இது இங்கும் சரி முன்பு மும்பையில் இருந்த போதும் நடக்க கூடியது. சொந்த ஊர் மற்றும் சொந்தங்களை விட்டு அதி தொலைவில் பெரும்பாலும் வாழ்வதால் இது நடக்கும்.

உறவினர் மட்டும் சில நாட்கள் உடன் தங்குவர். வார இறுதியில் விடை பெரும் போது  மூன்று உறவினர்கள் மட்டும் கையில் ஒரு லட்டர் கொடுத்து விட்டு போவார்கள். கையில் கொடுக்கவில்லை என்றால் சில நாட்களில் வந்து விடும். முன்பு தபாலிலும் தற்போது ஈமெயில் லிலும் வந்து விடும்.

இந்த கடிதங்கள் குடும்பத்தில் ஒரு சச்சரவை எப்போதும் ஏற்படுத்தி விடும். சந்தோசமாக இருந்த நாட்கள் மனதை விட்டு அகண்டு விடும். கடிதத்திலுள்ள நல்ல அம்சங்களை விட கண்டுள்ள குறைகள் அல்லது அறிவுரைகள் மிகவும் எரிச்சலூட்டி விடும்.

தேவைக்கு அதிகமாக பொருட்கள் இருக்கு அல்லது பையனுக்கு தேவைக்கு மேலவே நடக்கிறது; இருந்த நாட்களில் இதைச் செய்தீர்கள், வேறு விதமாய்ச் செய்திருந்தால் செலவு குறைந்திருக்கும். இது மாதிரி ஏதோ ஒரு லிஸ்ட் வரும்.

மேல் குறிப்பிட்டுள்ள விஷயங்களில் எதிலுமே அவர்கள் மேல் சிரமத்தை கொடுத்திருக்கவே மாட்டோம். ஆனால் எல்லாத்தியும் நோட் பண்ணி லெட்டர் வந்திடும். இது மாதிரி அனுப்புவது அவர்கள் வழக்கமாம். மாற்றிக் கொள்ளமாட்டார்கள்.

இது மாதிரி விஷயங்களில் அனுபவம் முன்பே இருந்தாலும் அடுத்த முறை இதை மனதில் வைத்து கவனிக்க முடியாம இருக்க முடியாது. அப்பவும் லெட்டர்  வரும்.

ஊரில் சிலவற்றில் இவர்களை நம்பி இருப்பதால் இந்த கடிதச் சுமைகளை தாங்கத் தான் வேண்டும்.

ஒவ்வொருத்தருடைய சந்திப்புகளும் ஒரு பேப்பர் வெயிட் ஆக கடிதச் சுமையாக இல்லாமல் இருத்தல் வேண்டும்.

டிஸ்கி : சமீபத்தில் யாரும் வரவில்லை. லெட்டரும் வரவில்லை.

3 comments:

எல் கே said...

அத்தகையவர்களின் கடிதங்களை புறக்கணியுங்கள்

vasu balaji said...

மனக்குறை எதுக்கு. ஸ்பான்ஸார் பண்ணா நான் வந்துட்டு லெட்டர் தரமாட்டன்னா சொல்றேன்:))

ஓலை said...

:-)))