Monday, December 3, 2012

தவமாய் காத்திருந்து

தவமாய் காத்திருந்து 

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு குழந்தை பிறக்க இருக்கிறது. அதன் வரவை எதிர் நோக்கி மிக ஆவலோடு இருக்கிறோம். 

பிரசவத்தின் போது மனைவியுடன் அருகிலிருந்து மிக ஆவலுடன் பிறக்கப் போகும் நமது வரவை எதிர் நோக்கி இருக்கையில், குழந்தை meconium சாப்பிட்டிருக்க சாத்தியமிருக்குன்னு டாக்டர் சொல்லி மிகப் பரவசமாக அவசரமாக காரியத்தில் இருக்கும் போது, நம் மனதில் ஒரு சுளீரென ஒரு வலி, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமப் போயிடுமோன்னு ஒரு கவலை; உயிருடன் பார்ப்போமா அல்லது இறந்து தான் பார்க்க வாய்ப்பு கிடைக்குமான்னு மனதில் ஒரு பெரிய சுழல் காற்று மனதில் ஓடி, வெளி வரும் குழந்தையை மட்டும் நோக்க வைத்து விடுகிறது.
 

மனைவியின் பிரசவ வலியும் உணர முடியாமல் பிறந்த குழந்தை உடன் அழுவானா பிழைப்பானா என்று மட்டும் நமது வலி பெரிதாக இருக்கிறது. அடுத்தஅரை மணி நேரம்  குழந்தையைப் பற்றி டாக்டர் சொல்லப் போகும் வார்த்தைக்கு தவமாய்த் தவமிருந்து நல்ல செய்தி வரும் போது ஒரு நிம்மதி, பெரிய கடல் அலை ஓய்ந்து, ஒரு மெதுவான சலனம் நம் மனதில், அப்போது தான் மனைவி சொல்லும் வார்த்தை என் பிரசவ வலியின் துடிப்பு கேட்ட மாதிரி ் தெரியலையேன்னு சொல்லும் போது இத்தனை நேரம் நம் மனது தவித்த வற்றை உடன் பகிர முடியா ஒரு அழுத்தம் வருகிறது.


இதையே அன்பு பா.ரா.வும் நேற்று பகிர்ந்திருந்தார். பாம்பறியும் பாம்பின கால்.

இன்று அலுவலகத்தில் சக ஊழியனுக்கு என்ன துயரமோ, பிரசவத்தின் போது  இழப்பு. அதிகமாவே  துடித்திருப்பான். :-(