Monday, December 31, 2012

வருடத்தின் கடைசி நாளில்

வருடத்தின் கடைசி நாளில் புதிதாக ஒரு restaurant போக முடிவெடுத்து நானும் என் மகனும் ஒரு pizza inn கடைக்குள் மதியம் buffet உண்டு என்றறிந்து சென்றோம்.

நுழையும் போதே மிக மலர்ந்த முகத்துடன் சீன கொரியா பெண்கள் வரவேற்றனர். கடையில் முழுவதும்  வேலை செய்வது சீன கொரியா பெண்கள் என்று தெரிந்தது. முப்பதுக்கும் மேல் ஆட்கள் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்தனர்.

நானும் பையனும் உள்ள நுழையும் முன்னரே அதிகம் vegetarian கிடைக்காது என்று தெரிந்தும் கிடைத்த வேகிடரியன் மட்டும் உண்டு விட்டு மேலும் பசியிருந்தால் வேறு இடம் பார்க்கலாம் என்று முடிவோடு தான் போனோம்.

ஏழெட்டு pizza tray முழுவதும் non-vegetarian pizza மட்டும் இருந்தது அதிர்ச்சியாக இருந்தது. எப்போதும் cheese pizza இருக்கும். அதுவும் காணோம். பையனும் நானும் கொஞ்சம் அதிர்ந்து விட்டோம்.

ஒரே ஒரு பணியாளரிடம் vegetarian pizza ஏதாவது இருக்கா என்று கேட்டேன். சிறிது கூட முகம் கறுக்காமல் சிரித்துக் கொண்டே அமருங்கள் வரும் என்றனர்.

அடுத்த பத்து பதினைந்து நிமிடங்களில் நடந்தது கனவா என்று தெரியவில்லை.

வரிசையாக ஐந்து விதமான vegetarian pizza எட்டு எட்டு துண்டுகளாக நறுக்கி ஐந்து tray இல் buffet டேபிளில் கொண்டு வந்து நிரப்பி விட்டனர்.

ஒவ்வொரு  தட்டும்  கொண்டு வந்த பின்னர் ஒருவர் வந்து முகமலர்ச்சியுடன், இப்போது spinnach pizza , இப்ப ப்ரோக்கொலி வித் lettuce, அடுத்து vegetarian pizza டேபிளில் வைத்திருக்கிறோம் என்று சொல்லி கொண்டு வந்து அசத்தி விட்டனர். ஒவ்வொன்றும் செம ருசி. கடைசி வரை நின்று கவனித்தனர்.

ஒரே கட்டணம். அதிகம் ஒன்றும் சொல்ல வில்லை, முகம் சுளிக்க வில்லை. மலர்ந்த முகத்துடன் செய்தனர்.

கடைசியில் விடை பெறும் போது இன்று நீங்கள் மட்டும் தான் vegetarian இங்கே என்று சிரித்துக் கொண்டே சொன்னார்கள்.

ஒரு பெரிய வாழ்த்துடன் விடை பெற்றோம்.

வருடத்தின் கடைசி நாளை நல்ல சுவையுடன் உணவளித்து ஒரு மலர்ந்த நினைவலைகளை உருவாக்கிய நம்மைப் போன்ற அந்த தென் ஆசிய மக்களை புத்தாண்டு நினைவோடு வாழ்த்துகிறேன்.

வரும் புத்தாண்டு உங்களையும் இவ்வாறு சிறக்க வைக்க வேண்டுதலுடன் உங்கள் அனைவருக்கும் ஒரு இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள் தெரிவித்துக் கொள்கிறேன்.

அன்புடன்.

Wednesday, December 26, 2012

சோற்றுக்கணக்கு

ராசக்கா காலையில நேரத்தில எழுந்திரும். எழும் முன்னவே நாள் முழுக்க என்ன செய்யனும்ன்னு எதையோ யோசிச்சிட்டே இருக்கும். ராசக்காவின் மாமனோட உறவு சனம் தினம் பத்து பதினைந்து பேரோ அவங்க வீட்டுல சாப்பிடும். அக்கா  எல்லோரையும்  மிரட்டி எதோ வேலை வாங்கி கிட்டே இருக்கும். ஒருத்தரும் சம்பாதிச்சு கொடுக்க இல்லை. மாமன் கொண்டு வருவது தான். இத்தினி பேர் சாப்பிடுதுங்கலேன்னு ஒரு தடவையும் சொல்லிக் காமிக்காது. ஆனால் ராசக்காவின் பேச்சுத் தொனியே அவிங்களை விலக்கி வைச்சிரும். தன்னோட தடித்த உருவத்தையும் தடித்த குரலையுமே தனது பலமாக வைத்தே வாழும் உசிரு அது.

நான் அது வீட்டுக்குள்ள நுழையும் போது அதன் முகத்தில ஒரு தனி மலர்ச்சி தெரியும். இத்தனிக்கும் மாமன் தான் என்னை தூக்கி வைச்சு விளையாடும். அக்கா வேலையா இருந்தாலும் கண்ணு மட்டும் என்னோட விளையாட்டையும் குறும்பையும் தனியாப் பார்த்து ரசிக்கும். பிறவு தனியா என்ர  ஆத்தா கிட்ட சொல்லும் போது தான் இத்தினியும் கவனிச்சிருக்குன்னு தெரியும். ஒரு வெள்ளி கிண்ணத்துல சோறு பிசைஞ்சு ஊட்டும். மாமனோட வெள்ளித் தட்ட வையுன்னு அடம் பிடிச்சாலும் எதையோ சொல்லி வெளியத் தூக்கி கிட்டு வந்திரும். மாமனோட அக்கா அந்த தட்டை மாமனுக்குத் தவிர யாருக்கும் கொடுக்காது. ரொம்ப கேட்டா போய் உன்ர வீட்டுல துன்னுன்னு விரட்டும். ராசக்கா  வெளிய கூட்டி வந்திரும்.

தினம் பத்து பேரு திங்கிற வீட்டுல ராசக்கா ஏதொ சொல்லிச்சுன்னாத் தான் சண்டை வரும். மாமனோட மச்சான் உள்ள வராம வெளிய நின்னு பேசிட்டுப் போயிரும். யாரும் சாப்பிடுவதற்கு ஒன்னும் சொல்லாது. ஆனால் ஏதொ ஒன்னு சொல்லி சண்டை வர வழவைச்சிரும். எதுவும் புரியாம அங்கேயே விளையாடிகிட்டு இருப்பேன். யாராவது கண்ணு கசங்கிச்சுன்னா ஓடியாந்துருவேன்.

ஊராம் புள்ளைய எடுத்து வளர்த்தா தன்  புள்ளை தானே வளரும்ங்கும். ஆனால் அக்கா வீட்டுல புள்ளைகுட்டி கிடையாது. என்னைத் தவிர அது வளர்த்து விட்டது மாமனோட உறவு சனத்துல மட்டும் தான். அந்த புள்ளைங்களோட விளையாடுவேன். அங்கிருக்கிற வாலிபப் பசங்க பொண்ணு பிள்ளைகளோடு விளையாடுவேன். வீட்டுக்கு சாப்பிட தூங்க மட்டும் வருவேன்.

நான் வளர வளர அந்த வீட்டுல வளர்ந்த மற்ற புள்ளைங்களுக்கும் கல்யாணம் சேர்த்தி எல்லாம் செய்து வைச்சது. அந்த வீட்டு கல்யாணம் பண்டிகை சேர்த்தி எல்லாத்திலும் என்னை பக்கத்தில வைச்சுக்கும்.

ஜெயமோகனின் சோற்றுக்கணக்கு  படிக்கும் போதெல்லாம் அதில் வர்ற கேத்தேல் சாஹிப் என்ர ராசக்கவாத்தான் இருக்கும். ராசக்காவின் சோத்துக் கணக்கை யாராலயும் அடைக்க முடியாது.

Saturday, December 15, 2012

Paper Weight

எனது வீட்டிற்கு உறவினர்கள் நண்பர்கள் வரும் போது விருந்தோம்பல் கொஞ்சம் அதிகமாவே இருக்கும். மனைவி நிறைய பதார்த்தங்கள் செய்து அசத்தி விடுவார். இது இங்கும் சரி முன்பு மும்பையில் இருந்த போதும் நடக்க கூடியது. சொந்த ஊர் மற்றும் சொந்தங்களை விட்டு அதி தொலைவில் பெரும்பாலும் வாழ்வதால் இது நடக்கும்.

உறவினர் மட்டும் சில நாட்கள் உடன் தங்குவர். வார இறுதியில் விடை பெரும் போது  மூன்று உறவினர்கள் மட்டும் கையில் ஒரு லட்டர் கொடுத்து விட்டு போவார்கள். கையில் கொடுக்கவில்லை என்றால் சில நாட்களில் வந்து விடும். முன்பு தபாலிலும் தற்போது ஈமெயில் லிலும் வந்து விடும்.

இந்த கடிதங்கள் குடும்பத்தில் ஒரு சச்சரவை எப்போதும் ஏற்படுத்தி விடும். சந்தோசமாக இருந்த நாட்கள் மனதை விட்டு அகண்டு விடும். கடிதத்திலுள்ள நல்ல அம்சங்களை விட கண்டுள்ள குறைகள் அல்லது அறிவுரைகள் மிகவும் எரிச்சலூட்டி விடும்.

தேவைக்கு அதிகமாக பொருட்கள் இருக்கு அல்லது பையனுக்கு தேவைக்கு மேலவே நடக்கிறது; இருந்த நாட்களில் இதைச் செய்தீர்கள், வேறு விதமாய்ச் செய்திருந்தால் செலவு குறைந்திருக்கும். இது மாதிரி ஏதோ ஒரு லிஸ்ட் வரும்.

மேல் குறிப்பிட்டுள்ள விஷயங்களில் எதிலுமே அவர்கள் மேல் சிரமத்தை கொடுத்திருக்கவே மாட்டோம். ஆனால் எல்லாத்தியும் நோட் பண்ணி லெட்டர் வந்திடும். இது மாதிரி அனுப்புவது அவர்கள் வழக்கமாம். மாற்றிக் கொள்ளமாட்டார்கள்.

இது மாதிரி விஷயங்களில் அனுபவம் முன்பே இருந்தாலும் அடுத்த முறை இதை மனதில் வைத்து கவனிக்க முடியாம இருக்க முடியாது. அப்பவும் லெட்டர்  வரும்.

ஊரில் சிலவற்றில் இவர்களை நம்பி இருப்பதால் இந்த கடிதச் சுமைகளை தாங்கத் தான் வேண்டும்.

ஒவ்வொருத்தருடைய சந்திப்புகளும் ஒரு பேப்பர் வெயிட் ஆக கடிதச் சுமையாக இல்லாமல் இருத்தல் வேண்டும்.

டிஸ்கி : சமீபத்தில் யாரும் வரவில்லை. லெட்டரும் வரவில்லை.

Friday, December 7, 2012

நீங்கள் விதைக்கும் விதை

கையெடுத்து கும்பிடும் கைகள் 
கையில் கடப்பாறை தூக்கி
கோவிலையையும் மசூதியையும்
இடிக்க புறப்பட்ட போதே
அந்த கூர்மையான கடப்பாறை
நிலத்தில் ஆழமாக
இறங்கி விட்டது.
 
கும்பிடும் ஆத்திகனே 
இடிக்கும்
நாத்திகனாகி விட்டான்.
வம்பிடும் நாத்திகனோ 
இடிக்காதே எனும்
ஆத்திகனாகி விட்டான்.
 
நீங்கள் நடத்தும் 
செய்கைகளுக்கு 
நீங்கள் வணங்கும் 
தெய்வங்களே வந்து 
மறுபடியும் 
அவதரித்து இன்னொரு 
இதிகாசம் வழங்க 
வேண்டி வரும்!

இன்று இருப்பவர்களை 
இறந்ததாக புரளி கிளப்பி
இருக்கின்ற மற்றவர்களை 
சமாதிக்கு அனுப்பி
ஆறுதலடையப் போவதாக
நம்பும் சனமாக
அடிமையாக உருவாக்கி
கொள்கையினால் பிரியாமல்
சுயலாபத்திற்குப் பிரிந்தவர்கள்
வைத்த விதையும்
நிலத்தில் ஆழமாக
இறங்கிவிட்டது.

கொள்கையற்று நீங்கள் 
பிரித்த கூட்டம்
இன்று உங்களை 
உயிருடன் சமாதிக்கு 
அனுப்ப இருக்கிறது.

மொழி வாரி மாநிலமாகப் 
பிரித்தால் மொழி வளரும் 
நாடு வளரும் செழிக்குமென 
நினைத்தவன் விதைத்த விதையும் 
வளரத் தெரியாமல் வளர்ந்து 
இயற்கை வளத்தையும் 
மொழி பிரித்து 
நிலத்தில் இறக்கி
விட்டு வைத்திருக்கிறது.

இன்று அதே 
மொழியின் காரணத்தினால் 
இயற்க்கை வளம் 
பகிர மறுக்கப்படுகிறது.

ஆண்டான் அடிமை உறவு 
என்றும் உடையாமல் இருக்க 
படைத்தவன் விட்டுச் சென்ற 
சாதிகளும் உரமிட்டு வளர்ந்து 
நிலத்தில் நீண்டு 
இறங்கி விட்டது.

இன்று ஆண்டானையும் 
அடிமையையையுமே 
ஆட்டுவிக்கும் சக்தியாகி விட்டது 
அவர்கள் வைத்த விதை.

விஞ்ஞானம் பொருளாதாரம் 
வளர்ந்தாலும் 
அதையும் உரமாக 
உபயோகிப்பதற்கு ஏற்றவாறுதான் 
விதைத்த விதை 
நிலத்தில் இறங்கியிருக்கு.
 

இனி பிரிப்பதற்கு 
ஏதேனும் உருவாக்க 
முயற்சித்தால்
நீங்கள் விதைக்கும் விதை   

உங்களை 
இதே மண்ணில் 
சமாதியாக்காவே வளரும்.

Monday, December 3, 2012

தவமாய் காத்திருந்து

தவமாய் காத்திருந்து 

நீண்ட நாட்களுக்குப் பிறகு ஒரு குழந்தை பிறக்க இருக்கிறது. அதன் வரவை எதிர் நோக்கி மிக ஆவலோடு இருக்கிறோம். 

பிரசவத்தின் போது மனைவியுடன் அருகிலிருந்து மிக ஆவலுடன் பிறக்கப் போகும் நமது வரவை எதிர் நோக்கி இருக்கையில், குழந்தை meconium சாப்பிட்டிருக்க சாத்தியமிருக்குன்னு டாக்டர் சொல்லி மிகப் பரவசமாக அவசரமாக காரியத்தில் இருக்கும் போது, நம் மனதில் ஒரு சுளீரென ஒரு வலி, கைக்கு எட்டியது வாய்க்கு எட்டாமப் போயிடுமோன்னு ஒரு கவலை; உயிருடன் பார்ப்போமா அல்லது இறந்து தான் பார்க்க வாய்ப்பு கிடைக்குமான்னு மனதில் ஒரு பெரிய சுழல் காற்று மனதில் ஓடி, வெளி வரும் குழந்தையை மட்டும் நோக்க வைத்து விடுகிறது.
 

மனைவியின் பிரசவ வலியும் உணர முடியாமல் பிறந்த குழந்தை உடன் அழுவானா பிழைப்பானா என்று மட்டும் நமது வலி பெரிதாக இருக்கிறது. அடுத்தஅரை மணி நேரம்  குழந்தையைப் பற்றி டாக்டர் சொல்லப் போகும் வார்த்தைக்கு தவமாய்த் தவமிருந்து நல்ல செய்தி வரும் போது ஒரு நிம்மதி, பெரிய கடல் அலை ஓய்ந்து, ஒரு மெதுவான சலனம் நம் மனதில், அப்போது தான் மனைவி சொல்லும் வார்த்தை என் பிரசவ வலியின் துடிப்பு கேட்ட மாதிரி ் தெரியலையேன்னு சொல்லும் போது இத்தனை நேரம் நம் மனது தவித்த வற்றை உடன் பகிர முடியா ஒரு அழுத்தம் வருகிறது.


இதையே அன்பு பா.ரா.வும் நேற்று பகிர்ந்திருந்தார். பாம்பறியும் பாம்பின கால்.

இன்று அலுவலகத்தில் சக ஊழியனுக்கு என்ன துயரமோ, பிரசவத்தின் போது  இழப்பு. அதிகமாவே  துடித்திருப்பான். :-(

Sunday, December 2, 2012

அமெரிக்கன் லாட்டிரி


அமெரிக்கன் லாட்டிரி 

எங்களது
ஆசைக் கனவுகள்
அவர்களை
மில்லியானராக்கியது.

கண்டோம் 
கனவுகள்
ஆனால்
அதிலுள்ள பூஜ்யங்களை
மட்டும்
தெரிந்து கொள்ளக் கூடிய 
தவறான
கனவாகி விட்டது
கண்டவனுக்கு.