Wednesday, October 17, 2012

சுண்டல் நவராத்திரி

சுண்டல் நவராத்திரி

பசியிலிருக்கும் நவராத்திரி இரவுகள்
மனைவி கொண்டு வரும்
கொண்டக் கடலை சுண்டலின் சுவையில்
வயிற்றுச் சுவற்றில் கொண்டாட்டம் போடுகிறது.

சுண்டலோடு அறுசுவை உணவையும்
அள்ளி வழங்கும் அன்பு சகோதரிகளின்
உபசரிப்பில் அள்ளி வந்து பகிர்ந்துண்ணும்
துணையாளின் அன்பில் மிளிருது சுகம்.

நவராத்திரிகளைக் கொண்டாடும் பெண்டிரின்
சுவையான சுண்டலை நோக்கியே
எதிர் பார்த்திருக்கும் என்னைப் போன்ற
பேதையிரின் நோக்கில்
பொம்மைகளை கலை உணர்வோடு வைத்து
சமூக மக்களோடு கலந்துறவாடும்
பெண்களின் அன்புறவாடலை
சுண்டலின் சுவையால் மட்டுமே காண முடிகிறது.

சுண்டலற்ற ஒரு நவராத்திரி
என்னைச் சுண்டி விடும் என்ற
பேதமையின் அவதானிப்பில்
இனி வரும் இரவுகளில் கிடைக்கும்
சுண்டல் வகைகள் எள்ளி நகையாடும்.

இனிய நவராத்திரி இரவு சுண்டல்கள்.

1 comment:

பழமைபேசி said...

சுண்டல் சுண்டிவிட்ட சுண்டுக் கவிதை, சுண்டல் போல சுவை!!