Saturday, September 1, 2012

நேசம்

நேரில் காணா நேசனை
நேச நெஞ்சம் தொழும்
எண்ணற்ற தேச மக்கள்
நெறிமுறைக் கடன் படைத்து
ஒரு உன்னத உத்தமராக்கி
உயர்த்தி வைத்திருக்கும் நிலையில்

அல்லல் படும் வாழ்க்கையில்
அவதி நீக்க வாரும்
என்றழைக்கும் பேதை மனதிற்கு
நேர்முகம் இல்லாத நேசன்
நேவிவிட வருவது எப்படி?

நேசமுள்ள மக்களை நேர்முகனாக்கி
நெறிமுறைக் கடன் படைத்து
ஒரு உன்னத உத்தமராக்கி
அல்லல் படும் வாழ்க்கைக்கு
அவதி நீக்கச் செய்திடுவாயோ!

3 comments:

Anonymous said...

வணக்கம் நண்பரே!

உங்களுடைய பதிவுகள் இலங்கைத்தமிழர்கள் பலரை சென்றடைய கூகிள்சிறி திரட்டியில்(http://www.googlesri.com/) இணையுங்கள். உங்கள் பதிவுகளை சுலபமாக கூகிள்சிறி திரட்டியில் நிர்வாகியாவதன் மூலம் இணைக்கலாம். உங்கள் மின்னஞ்சல் முகவரியை rss4sk@gmail.com என்ற மின்னஞ்சல் முகவரிக்கு மின்னஞ்சல் செய்து நிர்வாகியாகுங்கள். கூகிள்சிறியில் சேர்க்கப்படும் பதிவுகள் தன்னியக்கமுறையில் டிவிட்டர்,பேஸ்புக்,லிங்டின் போன்ற சமூக தளங்களில் பிரசுரமாகி அதிக வாசகர்களை சென்றடையும்.

தங்கள் மின்னஞ்சலை எதிர்பார்த்து
யாழ் மஞ்சு

பழமைபேசி said...

பேதை நெம்ப வருது. நீங்க ஒரு கள்ளமில்லாப் பேதை என்பதாலோ?

ஓலை said...

"கள்ளமில்லாப் பேதை" - நானா? ம்ம்ம் :-)

நன்றி பழமை.