Saturday, September 1, 2012

நேசம்

நேரில் காணா நேசனை
நேச நெஞ்சம் தொழும்
எண்ணற்ற தேச மக்கள்
நெறிமுறைக் கடன் படைத்து
ஒரு உன்னத உத்தமராக்கி
உயர்த்தி வைத்திருக்கும் நிலையில்

அல்லல் படும் வாழ்க்கையில்
அவதி நீக்க வாரும்
என்றழைக்கும் பேதை மனதிற்கு
நேர்முகம் இல்லாத நேசன்
நேவிவிட வருவது எப்படி?

நேசமுள்ள மக்களை நேர்முகனாக்கி
நெறிமுறைக் கடன் படைத்து
ஒரு உன்னத உத்தமராக்கி
அல்லல் படும் வாழ்க்கைக்கு
அவதி நீக்கச் செய்திடுவாயோ!