Sunday, August 12, 2012

எனது தேவை

எனது தேவை

வலிமையுடன் இருந்த போதும்
உங்கள் பேச்சைக் கேட்க
நாங்கள் தயாராயில்லை!

வலிமையிழந்த பின்னும்
உங்கள் பேச்சைக் கேட்க
கூடிய நிலையில் இல்லை நாங்கள்!

தேவையற்ற நேரத்தில்
தேவையற்றவைகளை அள்ளி வழங்கி
தேவைப் படாமல் செய்வதை விடுங்கள்!

 சுதந்திரம் என்பது
ஒருங்கிணைந்த மக்களின்
ஒரு ஒருங்கினைந்தப் போராட்டம்!

தேட வேண்டிய எங்கள் சுகம்
தேடிக் கொள்வோம் நாங்களே!

- கவிதை

No comments: