Tuesday, July 3, 2012

FETNA

இன்னும் சில நாட்களில் FETNA வெள்ளி விழா துவங்க இருக்கிறது. எனது அருமை நண்பர் பழமைபேசி முதல் முறையாக தலைமைக் குழுவில் இருந்து அவரது நண்பர்களுடன் நடத்தி வருகிறார். விழா வெற்றி பெற வாழ்த்துகள்.

எனது சக அலுவல நண்பர் மற்றும் தெரிந்தவர்கள் குடும்பமாக செல்கிறார்கள். குடும்பமாக செல்லும் பொது 300, 400 டாலர் க்கும் மேல் செலவானாலும் நண்பர்களுடன் சேர்ந்திருக்க கண்டுகளிக்க செல்கிறார்கள்.

கடந்த சில வருடங்களாக FETNA பற்றிய விமர்சனங்களைப் படித்து வருகிறேன். சிலவற்றில் உண்மைகள் இருந்தாலும் முழுமையாக ஏற்க முடியவில்லை. நல்ல விமர்சனங்கள் புடம் போட உதவும். ஆனால் அதை எடுத்துக் கொள்பவர்கள் பொறுத்து.

நான்கு வருடம் முன் முதல் முறையாக எங்கள் ஊரில் நடந்த போது போயிருந்தேன். மூன்று நாட்கள் முழுவதும் அரங்கத்திலேயே இருந்தேன். ரசித்தவை பல. ரசிக்க முடியாதவை பல. எல்லாம் நம் விருப்பப் படி தான் நடக்கனும்னு எதிர் பார்த்தல் சாத்தியமில்லை. தமிழகத்தில் நலிந்து வரும் நடனக் கலைகளை, கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், தப்பாட்டம், இன்னும் பல்வேறு நடனங்களை ஒருமித்துப் பார்க்க முடிந்தது. இலங்கை சம்பந்தப் பட்ட அரசியல் தவிர, இந்திய அரசியல் பற்றிய கருத்துகள் விமர்சனங்கள் அதிகமில்லை. வந்திருந்த அரசியல் கட்சித் தலைவரும் கலைகளை ரசித்து விட்டு சென்று விட்டார்.

இந்த தடவை எதிர்பார்க்காத நல்லக்கண்ணு ஐயா, ராமகிருஷ்ணன், மற்றும் இவர்கள் கருத்துகளுக்கு முற்றிலும் மாறு பட்ட ஆன்மிக யோகா குரு ஆகியோர் வருகை தர இருக்கின்றனர். வித்தியாசமாகத் தான் இருக்கப் போகிறது.

விழாவிற்கு செல்பவர்கள் தேர்ந்தெடுந்து பார்த்து மகிழ வேண்டியது தான். எல்லோருடைய விருப்பு வெறுப்புகளுக்கு ஏற்றவாறு அமைத்துக் கொள்ள இது வரை இது போன்று எந்தவொரு அமைப்பும் பெரிய அளவில் வந்ததில்லை. இது மற்றும் விதிவிலக்கென்று எதிர் பார்க்க முடியாது. மாறுபட்ட கொள்கைகளை மாறுபட்ட விருப்பு வெறுப்புகளைக் கொண்டே வளர்ந்துள்ளோம். அதில் இந்த விழாவில் நடக்கும் நிகழ்ச்சிகளும் அவ்வாறே.

மூன்று நாட்கள் ஒரே அரங்கத்திற்குள் உட்கார்ந்து கொண்டு வெறும் ஒருவருடைய  விருப்பத்திற்கு ஏற்றவாறு மட்டும் நிகழ்ச்சிகள் இருக்க வேண்டும் என்று எதிர்பார்த்தால், நாம் வளர்ந்து வந்த விதத்திற்கு விலக்காகப் போய் விடலாம்.

எந்த விஷயத்திலும் குண்டக்க மண்டக்கா வாகவே பேசுவது, யோசிப்பது, செயல் படுவது என்றுள்ள மக்கள் மத்தியில் எல்லா மக்களின் விருப்பங்களையும் நிறைவு செய்வது சாத்தியமில்லை. எல்லா விதத்திலும் பிளவு பட்டுள்ள மக்கள், சாதி, மதம், அரசியல், ஆன்மீகம், ஆத்திகம்/நாத்திகம், ஒன்று கூட விடாமல் எல்லாத்திலும் வேறுபட்டுள்ள மக்கள், ஒரு அரங்கத்தில வந்து உட்காரனும்னா, என்ன செய்யனும்னு யோசனை அனுப்பலாம். அதனை FETNA மக்கள் ஏற்புடையவையாக இருந்தால் வரும் காலத்தில் அமுல் படுத்த வேண்டிக் கொள்ளலாம்.

துணிக் கடைக்கோ அல்லது ஒரு Mall சென்றாலோ தேவைப் பட்டதை மட்டும் வாங்கி வருவதைப் போல தனக்கு பிடித்த அல்லது எதிர் பார்த்த நிகழ்ச்சிகளைப் பார்த்து வரலாம். தேவையில்லா விட்டால் அல்லது அதை வேறு விதத்தில் செலவிடலாம். பார்க்க நினைத்த சில நண்பர்களைப் பார்க்க முடியாமல் போகும். தனி நபர் விருப்பம்.

FETNA அதன் வருமானத்தை பிற நல்ல காரியங்களுக்கு செலவிட வேண்டும். அதை அறிவித்து செயல் படுத்த வேண்டும்.

வாழ்த்துகளுடன்

3 comments:

புதுகை.அப்துல்லா said...

2010 ஆம் ஆண்டு நடைபெற்ற விழாவுக்கு நான் வந்து இருந்தேன். எனக்குப் பிடித்து இருந்தது.

ஓலை said...

@ அப்துல்லா. சந்தோசமான செய்தி. உங்களை சந்திக்கும் வாய்ப்பு போய் விட்டது. Waterbury CT மிகத் தொலைவு. செல்லவில்லை.:-)

பழமைபேசி said...

Thanks sir!! I am on travel!!