Thursday, July 5, 2012

தடைகள்

சமீப காலங்களில் இந்தியாவில் ரயில், பஸ் களில் பயணித்ததில், எந்த ரயிலும் பஸ் எதுவும் காலியாகப் போனதில்லை. டிக்கெட் கிடைக்கவில்லை என்று திரும்பிப் போனவர்களும், ஏமாற்றப் படுபவர்களும் அதிகம். இடம் இல்லாததால் தவறான முறைகளில் பயணிப்பதற்கான காரணங்களை ரயில்வே மற்றும் பேருந்து கழகங்கள் உருவாக்குகின்றன. ஏன் மேலும் தொடர் ரயிலும் பஸ் ம் விட மாட்டேங்கிறாங்கன்னு புதிராகவே இருக்கு. கேட்பாரில்லை.

மேலும் அதிக ரயில், பஸ் விடுவதால், மேலும் அதிக வேலை வாய்ப்பு, அரசுக்கு வருமானம், மக்கள் தவறான முறைகளில் அதிகம் செலவளிக்காமல் பயணிக்க முடியும். இருந்தும் செய்வதில்லை, சிலர் செய்ய விடுவதும் இல்லை.

வருமானம் வர ஒரு சின்ன வாய்ப்பு கிடைத்தால் வெளி நாடுகளில் அதை எளிதாகப் பயன்படுத்தி சம்பாதித்து விடுகின்றனர். இந்தியாவில் போக்குவரத்து மூலம் அதிகம் வருமானம், வேலை வாய்ப்பு, மக்களை தவறான வழியில் செல்லாமல் ஓரளவுக்கு நெறி படுத்த முடியும்.

அமெரிக்காவில் கார் industry மற்ற போக்குவரத்துகளை தடை படுத்துவது போல இந்தியாவிலும் அப்பட்டமாக நடக்கிறது.

No comments: