Saturday, May 19, 2012

நினைவலைகள் 1

அஸ்ஸாம்ல முன்னெல்லாம் ரயில்வே ஸ்டேஷன் போனா தான் ரயில் விவரம் தெரியும். போன் பண்ணா எடுக்க மாட்டாங்க. நேர்ல போனா என்குயரி கவுன்ட்டர் முன்ன பெரிய queue இருக்கும்.

அண்ணே ! வண்டி எப்போ வரும்?

அதோ அங்க எழுதியிருக்குல்ல.

ஆமாண்ணே! அதே தான் நாலு மணி நேரமாப் பார்க்கிறோம்.

வந்துரும். வரணும்.

வந்தா சரியான நேரத்துக்கு எடுத்துருவியலா?

அது பக்கத்துலையே எழுதியிருக்குது பார்.

இப்ப போன் பண்ணி கேட்டு சொல்லு அண்ணே  !

எலேய் வரும் போது வரும். நீ நவுரு. என்குயரி கவுன்ட்டர்ல ஒரு கேள்வி மேல கேட்கக்கூடாது போ! மறுபடியும் வரிசை பின்னாடி போய் நில்லு.

இருண்ணே! அடுத்த ஆளுக்கு என்ன பதில் வருதுன்னு பார்க்கிறேன்.

எலேய்! அவனும் இதத் தான் கேட்பான், நானும் இதே தான் சொல்லனும்ல. போய் சோலியப் பாரு.

(பக்கத்தில உள்ள சக ஊழியரிடம் திரும்பி இன்னிக்கு வேலை ரொம்ப ஜாஸ்திங்க. ஒரு வெத்திலை, டீ சாப்பிட்டு வரேன் !)