Sunday, March 4, 2012

நிறத்தின் மாற்றம்

சமீபத்தில இது மாதிரி இரண்டு தடவ ஆயிட்டுது. பையனை வயலின் கிளாஸ்ல் விட்டுவிட்டு வரும் போது நல்ல காபி வாங்கிட்டு திரும்பலாம்னு காபி கடை போனேன். நான் வசிக்கும் ஊரில் எந்த கடைக்குப் போனாலும் ஒரு வரவேற்பு அல்லது ஒரு புன்முறுவலுடன் how கேன் i ஹெல்ப் யு என்பார்கள்.

இன்று வழிபாடு முடிஞ்சு திரும்பும் மக்கள் அதே கடையில் படையெடுத்து நின்றிருந்தனர். என் முறை வந்து காபி வாங்கி வெளிய வரும் போது கதவை அடைத்து நின்றிருந்த பெண்மணி உடம்பை அசைத்து வழி விட்டனர். பக்கத்தில் நின்றிருந்த அவள் கணவன், என்னை கடைக்கண்ணில் பார்த்துக் கொண்டே நக்கலாக, 'popular ஷாப், இஸ் இட் நாட்?' என்று அவளிடம் கூறினான். நான் ஒன்றும் பதில் சொல்லாமல் வழி விட்டதற்கு நன்றி சொல்லி விட்டு வந்து விட்டேன்.

சில மாதம் முன் இதே மாதிரி பையனை வகுப்பில் விட்டுவிட்டு காபி கடைக்குப் போய் நின்றேன். பணம் வாங்கும் பெண்ணோ அல்லது கலந்து கொடுக்கும் பெண்ணோ துளி கூட ஏறுடுத்துப் பார்க்கல, ஏதும் வரவேற்பு இல்லை, மற்றவர்களை மட்டும் கவனிப்பதில் ரொம்ப மும்முரமாக இருந்தனர். ஒன்றும் பேசாமல் வெளியேறி விட்டேன்.

அங்கு நிற்கும் போது மதியாதோர் வாசல் மிதிக்க வேண்டாம்னு மிகவும் தோன்றியதால், அருகில் கடை இருந்தாலும் போவதைத் தவிர்த்து வருகிறேன். ஆனால் உங்களிடம் பொல்லாங்கு சொல்லாமல் இருக்க முடியவில்லை.

பாவங்களுக்கு மன்னிப்பு கேட்கவும் நற்குணங்களையும் பெற மனமுவந்து சென்று வழிபடுகிறோம். முடிந்து வெளி வரும் போது நிறத்தின் மாற்றம் நம்மை பழையபடி செய்யத் தூண்டுகிறதா?

2 comments:

vasu balaji said...

போன வாரப் பாவத்தை துடைச்சுட்டு புதுசா கணக்கு ஆரம்பிக்க வேணாமா:)

ஓலை said...

அப்பிடி தான் சார் சொல்ல வருது.