Friday, February 10, 2012

ஆசிரியை படுகொலை குறித்து எனது விசனம்

ஒரு ஆசிரியை வீட்டிலும் பள்ளியிலும் தினமும் தொடர்ந்து வேலை செய்து வருவதால் ஏற்படும் மனப் பளுவை சுமை அதிகமாக இருக்கும் இடத்தில் இறக்கி வைப்பது சாத்தியமானது. அவ்வாறு அடைந்துள்ளதா என்று பார்க்க வேண்டும்.

மாணவர்களை ஆசிரியர்களுக்கு டீ காபி வாங்க அனுப்புவதும், வேறு சில சில்லறை வேலைகள் செய்ய அனுப்புவதும் நான் மாணவனாக இருந்த காலத்தில் நடந்தவை. உட்படாத சிறுவர்களை தண்டனைக்குள்ளாவது ஏற்பட்டுள்ளது.

ஆசிரியர்களுக்குள் பிரச்சனை ஏற்படும் போது சில மாணவர்கள் குளிர் காய்வதும் உண்டு. ஒரு ஆசிரியர் இன்னொருவரை பாதிப்பு ஏற்படுத்த உபயோகிப்பதும் உண்டு. இல்லா விட்டால் மாணவர்கள் தண்டனைக்குள்ளாவதும் உண்டு.

வகுப்பில் மற்ற மாணவர்கள் சத்தம் போட்டுக் கொண்டிருக்கும் போது, ஆசிரியர்கள் கண்ணில் தவறுதலாகப் படும் மாணவன் அதிகமாக அதிக காலம் தண்டிக்கப் படுவது என் விஷயத்தில் நடந்தது. இரண்டு மாத காலம் தரையில் உட்கார நேர்ந்தது. நான் பயந்த சுபாவம் உள்ளதால் அமைதியாகி விட்டேன். அவமானத்தை உள்ளடக்கி கொள்ளத்தான் பழக்கப் பட்டுள்ளேன், பழகி விட்டேன். அது மாதிரி ஏதாவது நடந்து விட்டதா.

சமீப காலமாக பள்ளி மாணவர்கள் ஆசிரியர்களை மார்க் poda வில்லை என்றால் மிரட்டுவது உண்டு.

அனுமானங்களுக்கு உட்படாமல் ஒரு குற்றமாக விசாரித்தால் உண்மை வரலாம். அதை படிப்பினையாக ஏற்றுக் கொண்டு மாற்றி அமைத்துக் கொள்ள ஆசிரியர் மாணவ சமுதாயம் தயாரா ?

ஒருத்தர் வெறுப்பை சம்பாதிப்பது மூலம் சொல்வதில் உண்மை இருந்தாலும் எதிலும் வெற்றி காண இயலாது. அனுசரித்துப் போவது நல்லது. முடியா விட்டால் விலகுவதே சிறந்தது.

ஆசிரியை படுகொலை குறித்து எனது விசனம்.

No comments: