Sunday, February 12, 2012

சமீபத்தில் படித்தது

கணவன் நிறைய குடித்து விட்டு வீட்டிற்கு வருகிறான். சமையலறைக்கு அருகில் வரும் போது மனைவி ஏதோ கேட்பது தெரியாமல் முழுவதும் வாந்தி எடுத்து விட்டு கீழ விழுந்து விடுகிறான்.

காலையில் தனது படுக்கையிலிருந்து எழுவதை உணர்ந்து அய்யய்யோ இன்னிக்கு மனைவியோட எந்த சண்டையும் வந்திடக் கூடாதேவென்று படபடப்புடன் சமையலறையை சுத்தம் செய்து மன்னிப்பு கேட்கலாம் என்று செல்கிறான்.

மனைவியில்லை. போச்சுடா இன்னிக்குன்னு நினைக்கும் போது, சமையலறை சுத்தமாக இருப்பதை பார்க்கிறான். மனைவியின் கடிதம் மேஜை மேல் இருக்கு. எடுத்துப் பார்த்தால், honey நான் கடை வரை போய் வருகிறேன் என்று மட்டும் இருப்பதைப் பார்த்து வியப்புடன் தனது மகன் சிறுவனிடம் என்ன நடக்குதுன்னு கேட்கிறான்.

சிறுவன், அப்பா! நீ நேற்று குடித்து விட்டு அறை முழுவதும் வாந்தி எடுத்தது மட்டுமில்லாமல் உன் உடல் பூரா வாந்தி மற்றும் சரக்கு அப்பி இருந்தது. உன்னை தூக்கி அம்மா சுத்தம் செய்ய முற்ப்பட்ட போது, நீ 'ஏய்! பெண்ணே! நான் திருமணமானவன். என்னை விட்டு விடு என்றாய்!'. அதற்கு மேல் நீ முற்றிலும் சுயநினைவு இழந்து விட்டாய். அம்மா ஒன்றும் சொல்லாமல் எல்லாவற்றையும் சுத்தம் செய்து உன்னை படுக்கையில் கிடத்தினாள்.

4 comments:

எல் கே said...

:)

vasu balaji said...

:))

க.பாலாசி said...

ஆமா.. நானும் எங்கயோ படிச்சேன்.. பகிர்வுக்கு நன்றிங் சாரே..

ஓலை said...

Nanri Karthik, Bala Sir & Balasi.