Sunday, February 5, 2012

இடைவெளி

வயதில் மூத்த நண்பர் வரும் போது எல்லா ஜோடிகளும் அறையில் உட்கார்ந்திருக்கும் விதத்தைப் பார்த்து, இங்கு எல்லோருக்கும் கல்யாணம் ஆயி எத்தனை வருஷம்னு சுலபமா சொல்லிரலாம்னார்.

புதிதாக கல்யாணம் ஆன ஜோடி இடிச்சு நெருக்கிகிட்டு இருந்தாங்க. வருஷம் ஏற ஏற ஜோடிகளுக்கு இடையே இருந்த இடைவெளியும் அதிகமாக இருந்தது. எல்லோருக்கும் ஆச்சரியம் கலந்த வியப்பு.

மனைவியின் சித்தப்பா சித்தி மட்டும் நெருங்கி உட்கார்ந்திருந்தனர். அவர்கள் மற்றவர்கள் பார்த்துப் பொறாமைப் படும் அளவு இன்று வரை காதலர்களே !

வருடம் ஏறினாலும் இடைவெளி அதிகமாகமல் பார்த்துக் கொண்டால் மணவாழ்வும் சிறக்கும்.

No comments: